மீன் வளர்ப்புக்கு அரசு காப்பீட்டு திட்டம் வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 8: தமிழகத்தில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வதுபோன்று, மீன் வளர்ப்புக்கும் அரசு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மீன்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் நெல் விவசாயம் செய்வதுபோல் குளம், குட்டைகள் வெட்டி விரால் போன்ற பலவகை மீன்களை வளர்த்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

மீன் வளர்ப்பு தொழில் விவசாய தொழிலாக தமிழ்நாடு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. சலுகை விலையில் இந்த தொழிலுக்கு மின் இணைப்பும் தமிழ்நாடு மின்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல விவசாயிகள், குடும்ப தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். குறுவை நெற்பயிர் போன்று மீன் விவசாயம் செய்யும் காலம், முதல் ஆறு மாதங்களே ஆகும். குளங்களை வெட்டி பல்வகை மீன் குஞ்சுகளை, அதிக விலைக்கு வாங்கி, நீரில் விடுகின்றனர். தினசரி குளத்தில் மீன்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

The post மீன் வளர்ப்புக்கு அரசு காப்பீட்டு திட்டம் வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: