சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.3,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 44,270 பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.