திருத்துறைப்பூண்டி, நவ. 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான பாஸ்கர், அந்த சங்கத்தின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 15வது மாநாட்டில் தேசிய நிர்வாக குழு உறுப்பினராக பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post விவசாய தொழிலாளர் சங்க தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தேர்வு appeared first on Dinakaran.