மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஆர்.கண்ணன் ஆஜராகினர். இதையடுத்து, நீதிபதிகள், சென்னை பல்கலைக்கழகம், யுஜிசி நிதியை பெறுகிறதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பல்கலைக்கழகம் நிதி பெறுகிறது என்றார்.அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு 1967ல் சென்னை பல்கலைக்கழக திருத்தப்பட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். இதையடுத்து, நிதி பெறுவதாக இருந்தால் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் துணைவேந்தர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடரக்கூடும். பல்கலைக்கழக மானியக் குழு நிதி சென்னை பல்கலைக்கழகத்தால் பெறப்படுகிறதா என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post துணை வேந்தர் தேடுதல் குழு விவகாரம் யுஜிசி மானியத்தை சென்னை பல்கலை பெறுகிறதா?: தமிழ்நாடு அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.