இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 110 -விதியின் கீழ் 5 வருடங்களுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றிய 1,278 நபர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காலியாக உள்ள 151 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து பட்டியல் எதிர்நோக்கப்பட்டுள்ளது. ஆகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதும், துறையினுடைய அன்றாட பணிகள் எந்த வகையிலும் தடைபடாமல் இருப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை துறையின் சார்பில் எடுத்து வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்து சமய அறநிலையத்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.