விழுப்புரம்: திண்டிவனம் புறவழிச்சாலை அருகே தனியார் உணவகம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து, ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் திருடப்பட்டுள்ளது. திருட்டு குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.