இந்த முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, எக்கோ மற்றும் கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து தனியார் மருத்துவமனை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. கண் சிகிச்சை பரிசோதனை செய்தவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில், வடபெரும்பாக்கம், சின்னத்தோப்பு, செட்டிமேடு, ரங்காகார்டன், கொசப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்: எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.