ரூ.2.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: ஜி.கே.எம் காலனி 32வது தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அந்த கடையில் திடீர் சோதனை செய்தனர். அங்கு பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் இருந்தன. இதையடுத்து, கடையின் உரிமையாளர் வரதராஜலு (48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரது கடை மற்றும் வீட்டில் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 109 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர், பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரூ.2.5 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: