பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் கோ.தளபதி எம்எல்ஏ வழங்கினார்

 

மதுரை, அக்.21: மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ வழங்கினார். மதுரையில், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளித் துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலாளர் மற்றும் தாளாளர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளித் துணைச்செயலாளர் பாஸ்கரன், விடுதி குழுச் செயலாளர் குமார், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் மணி, காமராஜர் அறநிலைய துணைத்தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் காசிமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘பள்ளியில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருந்து, மொபைல் போன் உபயோகிப்பதை தவிர்த்து பள்ளி மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் சிறப்பாக முடித்து அரசு பணிகளை பெற வேண்டும்’’ என்றார். முடிவில், தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

The post பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் கோ.தளபதி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: