பொதுமக்கள் மகிழ்ச்சி பாராட்டு பங்காரு அடிகளுக்கு அஞ்சலி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் பங்காரு அடிகளாருக்கு சிவசேனா கட்சி சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில பொது செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் ஆன்மிக உணர்வையும், நல் ஒழுக்கத்தையும், மகளிர் மேம்பாட்டையும் போதித்தவர் பங்காருஅடிகளார். ஏழை எளிய மக்களுக்கு கல்வியும் மருத்துவ உதவியும் கிடைத்திட செய்த மகான், அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று கூறி அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

The post பொதுமக்கள் மகிழ்ச்சி பாராட்டு பங்காரு அடிகளுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: