ஒரேநாடு, ஒரே தேர்தல் சட்ட ஆணையத்துடன் 25ம் தேதி ஆலோசனை

புதுடெல்லி: ஒேர நாடு, ஒரே தேர்தல் நடத்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23ம் தேதி டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 25ம் தேதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு முன்பு நீதிபதி ரிதுராஜ் அஸ்வதி தலைமையிலான சட்ட ஆணைய பிரதிநிதிகள் ஆஜராகி எவ்வாறு ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்க உள்ளனர்.

The post ஒரேநாடு, ஒரே தேர்தல் சட்ட ஆணையத்துடன் 25ம் தேதி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: