இதனால், நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், செண்பகத் தோப்பு வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், மம்சாபுரம் காவல்நிலையம் சார்பில் வனப்பகுதியில் ஒரு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘தொடர்ச்சியான மழையால் நீரோடகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. அனுமதியின்றி பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்லக் கூடாது என தெரிவித்துள்ளனர். இதேபோல, உரிய அனுமதி இல்லாமல் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினரும் எச்சரித்துள்ளனர்.
The post வனவிலங்குகள் நடமாட்டத்தால் செண்பகத் தோப்புக்கு பொதுமக்கள் செல்ல தடை: காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.