இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் தண்டனை நிறுத்தி வைக்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே சமயம், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டுள்ளார். ரூ.20 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
The post 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா, 15 நாட்களில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.