அமெரிக்காவின் எப்.பி.ஐ., சைபர் குற்ற இயக்குநரகம், இன்டர்போல், தேசிய குற்ற முகமை, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி புலனாய்வு பிரிவு (எப்.ஐ.யூ) வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையில் ஒரு வழக்கு, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் அளித்த புகாரின் பேரில் அடிப்படையில் 2 வழக்குகள் உள்பட மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலி கிரிப்டோகரன்சி மூலம் சந்தேகப்படாத வகையில் இந்தியர்களை குறிவைத்தது ரூ.100 கோடியை மோசடி செய்ததாக ஒரு வழக்கு உட்பட சைபர் குற்றம் மூலம் நிதி மோசடி செய்ததாக 5 தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆபரேஷன் சக்ரா-2 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் சோதனை: சைபர் குற்றவாளிகள் மீது சிபிஐ நடவடிக்கை appeared first on Dinakaran.