அழகர்கோவிலில் நவ.23ல் ராஜகோபுர கும்பாபிஷேகம்

அழகர்கோவில்: அழகர்கோவிலில் வரும் நவ23ம் தேதி ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகர்மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் வளர்ச்சிக்காவும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பணிகள், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இக்கோயிலின் ராஜகோபுர திருப்பணிகள் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி சுமார் 2 கோடி மதிப்பீட்டில் பாலாலய பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று புதுப் பொலிவுடன் காணப்படுகிறது.

The post அழகர்கோவிலில் நவ.23ல் ராஜகோபுர கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: