விருதுநகர், மார்ச் 27: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து தனியார் மதுபான கடைகள் மூடப்படும். விதிமீறி திறந்து செயல்படும் கடைகள், பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
