இதில் சிறுவர், சிறுமிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பஸ்சுக்குள் சிக்கி தவித்தனர். தகவலறிந்து அப்பகுதியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து எருமேலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஐப்பசி மாத பூஜை தொடங்கிய நிலையில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது: சிறுவர், சிறுமிகள் உள்பட 20 பேர் காயம் appeared first on Dinakaran.
