உறுப்பினர்கள் சேர்க்க ஏதுவாக 42 கைத்தறி கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம்

திருவிடைமருதுார்: உறுப்பினர்கள் சேர்க்க ஏதுவாக 42 கைத்தறி கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம் நடைபெற்றது என்று உதவி இயக்குனர் மோகன் கூறினார். இதுகுறித்து குடந்தை கைத்தறி சரகத்திற்கு உட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உதவி இயக்குனர் மோகன் கூறியது: குடந்தை கைத்தறி சரகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களின் கோரிக்கை விண் ணப்பங்களை பரிசீலித்து அங்கீகரித்தல், இறந்துபோன உறுப்பினர்களை நீக்குதல், கூட்டுறவு சங்க தேர்தலில் உறுப்பினர்கள் ஓட்டளிக்க ஏதுவாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவைகளின் நகல்கள் போன்ற ஆவணங்களை பதிவு செய்தல் மற்றும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ற வகையில் அந்தந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பொதுப்பேரவை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி குடந்தை கைத்தறி சரக கட்டுப்பாட்டில் உள்ள 48 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் திருபுவனம் சோழன், திருபுவனம் திருவள்ளுவர், அம்மாபேட்டை மற்றும் அரியலுார் மாவட்டத்தில் 3 சங்கங்கள் தவிர 42 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பொதுப்பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றார்.

The post உறுப்பினர்கள் சேர்க்க ஏதுவாக 42 கைத்தறி கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: