அடையார் உள்ளிட்ட சென்னையில் 3 மண்டலங்களில் அக்.17, 18-ல் குடிநீர் விநியோகம் பாதிக்கும் : சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.17, 18) அடையார் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: நெம்மேலியில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (அக்.17) காலை 9 மணி முதல் நாளை மறுநாள் (அக்.18) காலை 9 மணி வரை அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால் அடையார் மண்டலத்தில் தரமணி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் இந்திரா நகர் மேல்நீர் தேக்கத் தொட்டி பகுதிகள், பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளில், சோழிங்கநல்லூரில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post அடையார் உள்ளிட்ட சென்னையில் 3 மண்டலங்களில் அக்.17, 18-ல் குடிநீர் விநியோகம் பாதிக்கும் : சென்னை குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: