இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கன்டெய்னரை திறந்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 9 டன் கசகசா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கசகசா இறக்குமதி செய்ய தடை இல்லை. என்றாலும், அதற்கு உரிய அனுமதி பெற்று, உரிய வரி செலுத்த வேண்டும். எனவே வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசாவை கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 9 டன் கசகசா மூட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து இறக்குமதி செய்தவர்கள் குறித்து ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தவிடு என்றுகூறி இறக்குமதி தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.5 கோடி கசகசா பறிமுதல் appeared first on Dinakaran.