இந்த 2 தீவிரவாதிகளும் Morifat Maqbool மற்றும் Jazim Farooq அல்லது Abrar என்று அடையாளம் காணப்பட்டது. இவர்கள் லஸ்கர் -இ – தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் Abrar என்பவர் காஷ்மீரி பண்டிட் சஞ்சய் சர்மா கொலையில் தொடர்புடையவர் ஆவார். பிப்ரவரி 23 அன்று புல்வாமாவின் அச்சன் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே காஷ்மீரி பண்டிட் சஞ்சய் சர்மா கொலை செய்யப்பட்டு இருந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கியின் கிராமக் கிளையில் ஏடிஎம் காவலாளியாக இவர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே துப்பாக்கிச் சண்டையை அடுத்து ஷோபியான் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
The post காஷ்மீரி பண்டிட் சஞ்சய் சர்மா கொலையில் தொடர்புடையவர் உட்பட 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.