திருப்பத்தூரில் ஒன் இந்தியா வங்கி ஏ.டி.எம்.-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஏ.டி.எம்.-ஐ உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் இருக்கும் ஒன் இந்தியா வங்கி ஏ.டி.எம்-ல் கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்னக்கடை தெரு அருகே தாலுகா காவல்நிலையம் உள்ளது. அதன் அருகே ஒன் இந்தியா ஏடிஎம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஏடிஎம்-க்குள் பணம் எடுப்பது போல நுழைந்து அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு ஆயுதங்களால் உடைத்தனர். அப்போது அந்த வழியாக சென்ற முதியவர் சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டார். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் ஒன்று கூடினர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் 3 பேர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர். இதனால் ஏடிஎம்-ல் இருந்த பல லட்சம் மதிப்பிலான பணம் தப்பியது.

திருப்பத்தூர் காவல்நிலையம் அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று குறித்து சிசிடிவி மூலம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளை நடைபெற்றதை அடுத்து மீண்டும் திருப்பத்தூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பத்தூரில் ஒன் இந்தியா வங்கி ஏ.டி.எம்.-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: