காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

 

கோவை, அக். 6: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிவானந்தாகாலனி சர்க்கிள் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி, பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும், ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளரை மாபெரும் வெற்றி அடைய செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் சங்கர், மாவட்ட துணை தலைவர்கள் இராம.நாகராஜ், ஜெயபால், காந்தகுமார், ஈஸ்வரமூர்த்தி, ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் தனசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் தாமஸ் வர்கீஸ்,

கோட்டை செல்லப்பா, அஸ்மத்துல்லா, உதயகுமார், செல்வராஜ், சந்திரன், குணசேகரன், இளைஞர் காங்கிரஸ் சூரியபிரகாஷ், சுதன், கணேசன், கோட்டை ஜேம்ஸ், சக்திவேல், முருகன், கே.என்.ஆறுமுகம், சந்தோஷ், வன்மலர், மாலதி, சிவபெருமாள், நாராயணன், கோவை தாமஸ், தண்டபாணி, பூபதி, பார்த்திபன், முருகன், பழனிச்சாமி, ஆரோக்கியம், குணசேகரன், கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் அனீஸ் நன்றி கூறினார்.

The post காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: