நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக செய்தியாளர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
அஅதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து. 2 கோடி தொண்டர்கள் கட்சியில் இருப்பதாக அதிமுக சொல்கிறது, அதனால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம். இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதை வெளிப்படையாக பேசக்கூடாது என கூறினார்.
The post கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதை வெளிப்படையாக பேசக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.