போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ.31.47 கோடி செலவில் 3.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு பார்த்திபனூர்-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. பாலங்கள் கட்டப்பட்டு ஜல்லி போடப்பட்டு 90% பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளதால் அவதிக்கு ஆளாகி வருவதாக பார்த்திபனூர் மக்கள் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் – கமுதி புறவழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.