ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் நீர் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் சுவாமி சிலைகள், கடல் பற்கள் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தன. ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியபோது உள்வாங்கியது.