துப்பாக்கிசுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மகளிர் கோல்ப், ஆண்கள் குழு பேட்மின்டன் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியது. ஆண்கள் குண்டு எறிதலில் களமிறங்கிய இந்திய வீரர் தூர் தஜிந்தர்பால் சிங் 20.36 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சவுதி அரேபியாவின் டோலோ முகமது (20.18 மீ.) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் லியு யாங் (19.97 மீ.) வெண்கலமும் வென்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவிக்கும் வாய்ப்பு உள்ளதால், 2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்று படைத்த சாதனையை இந்தியா இம்முறை முறியடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
The post ஆசிய விளையாட்டு போட்டி பதக்க வேட்டையில் இந்தியா அரை சதம் appeared first on Dinakaran.