பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது கான் 38வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 10 கோல் போட்டு புதிய சாதனை படைத்தது. வருண்குமார் 2 கோல் அடிக்க (41’, 54’), ஷம்ஷேர் சிங் (46’), லலித் குமார் உபாத்யாய் (49’) தலா ஒரு கோல் போட்டனர். பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். லலித் குமார் நேற்று தனது 150வது சர்வதேச போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
The post பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 10 கோல் போட்டு சாதனை appeared first on Dinakaran.