கீழக்கரை பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழக்கரை, செப். 30: கீழக்கரை கிழக்கு புதுநகர் பகுதியில் உள்ள சித்தி விநாயகர், பாலமுருகன், கருப்பணசாமி, முனியசாமி, நவக்கிரகம், இடும்பன் கோயிலில் செலவில் திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் கும்மாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக கீழக்கரை மீனவ குப்பம் கடற்கரையில் இருந்து புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து, யாகசாலை பூஜை துவங்கியது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கோ பூஜை, பூர்ணாஹுதி பூஜை, தீப ஆராதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய குடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பூசாரி முனியசாமி வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கீழக்கரை பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: