கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு என புகார் தெரிவித்துள்ளனர். சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராம பகுதியில் சி.பி. சால்வண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. ஆந்திராவில் இருந்து கெமிக்கல் எக்ஸ்ட்ராக்ஷன் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து ரசாயனம் தயாரிக்கபட்டு வருகிறது. ரசாயன கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் திறந்தவெளியில் விடுவதால் கழிவுநீராக மாறி அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் கலப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
The post கள்ளக்குறிச்சி அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு appeared first on Dinakaran.
