பழநியில் பக்தர்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் வேண்டும்

பழநி, செப். 29: பழநி வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் வேண்டுமென செம்மொழி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்மொழி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த வஉசி பஸ் நிலையம் அருகே தனி இடம் ஒதுக்க வேண்டும்.

அடிவாரம் சன்னதி வீதிக்குள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க குதிரை வண்டி, ஆட்டோ, தள்ளு வண்டிகளை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும். அடிவாரம் ரவுண்டானாவில் செயல்படாமல் உள்ள நீரூற்றை சரிசெய்து செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தகவல் பலகைகளை அதிகளவில் வைக்க வேண்டும். நகராட்சி கழிப்பிடங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

The post பழநியில் பக்தர்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: