மனைவியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்தியவருக்கு வலை

கோவில்பட்டி, செப். 29: கோவில்பட்டி ஸ்டாலின் காலனி 1வது தெருவைச் சேர்ந்த பழனி மகன் காளிராஜ் (30). இவர், அதேபகுதி 3வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (32) என்பவரின் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்தாராம். இதை மாரிமுத்து பலமுறை கண்டித்தபோதும் காளிராஜ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செண்பகவல்லி அம்பாள் கோயில் அருகே காளிராஜ் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மாரிமுத்து, காளிராஜை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த காளிராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளிராஜின் தாய் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் வனச்சுந்தர் மற்றும் போலீசார், கத்தியால் குத்திய மாரிமுத்துவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

The post மனைவியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்தியவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: