ரோகிணி கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

அஞ்சுகிராமம், செப்.27: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். இயற்பியல் பேராசிரியை தங்கம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்து உரையாடினார். அப்போது அவர் நேரத்தின் முக்கியத்துவம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்,பேராசிரியைகள் செய்து இருந்தனர். பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.

The post ரோகிணி கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: