கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை, செப்.26: புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 579 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 10 பேர்களுக்கு பாதுகாவல் நியமன சான்றுகளும் மற்றும் ஒருவருக்கு ரூ.10,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிளும் மற்றும் கந்தர்வக்கோட்டை வட்டம், சுந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரிடம் ரூ.2,65,869 மதிப்புடைய மரண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யதுமுகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: