இதனால் அபிநயாவின் அம்மாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பவுதீஸ்வரன், அபிநயாவை கண்டிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதில் அபிநயாவின் அண்ணனான அரவிந்த் குமார் (24) என்பவருக்கு பவுதீஸ்வரன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. எனவே சமாதானம் பேசுவதற்காக பேரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வரச் சொல்லி பவுதீஸ்வரனை அரவிந்த் குமார் அழைத்துள்ளார். அதன்படி கடந்த 22ம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு திரும்பிய அபிநயாவிடம் பேரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பவுதீஸ்வரன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அரவிந்த் குமார், டேவிட், தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரும் பவுதீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் வெட்டிவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பவுதீஸ்வரன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மப்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் குமார், டேவிட், தமிழ் செல்வன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
The post காதல் விவகாரத்தில் வாலிபருக்கு வெட்டு காதலியின் சகோதரர் உட்பட 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.