அந்த கோரிக்கையை ஏற்று இதற்காக சுமார் ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அதனைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்விற்கு பேரூராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர் தீபா முனுசாமி, கேசவன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மஸ்தான், ஒப்பந்ததாரர் மகேந்திரன், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் பாஸ்கர், மாரிமுத்து, வார்டு செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகரத் தலைவர் பிரேம், வழக்கறிஞர் வேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தநிகழ்வில் நூலகர் தேவி, சுரேஷ்பாபு, கன்னிமாரா நூலகர் உமாராணி, ஜோதிபாபு, மோகனா, திருவள்ளூர் மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பேனிக் பாண்டியன், குப்பன், ரவி, ஆசிரியர் பாலா, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post கும்மிடிப்பூண்டியில் புதிய நூலகம் கட்டும் பணி appeared first on Dinakaran.
