அண்டர்காடு அரசு பள்ளியில் ரோஜா தினம் கொண்டாட்டம்

வேதாரண்யம், செப்.25: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு தொடக்கப் பள்ளியில், உலக ரோஜா தினம் கொண்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் வசந்தா தலைமை வகித்தார். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உலக ரோஜா தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பள்ளி சார்பில் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்பு மாணவர்கள் ரோஜா பூ சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். இதில் மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post அண்டர்காடு அரசு பள்ளியில் ரோஜா தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: