சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் குழாய் சேதம்: ரூ.25 ஆயிரம் அபராதம்

சிவகாசி, செப்.24: சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் குழாயை சேதப்படுத்தியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் விதமாகவும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் சிறப்புக் குழு அமைத்துள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் வேலாயுதம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தனது வீட்டின் அருகில் சென்ற மாநகராட்சி குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் முத்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தார்.மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி குடிநீர் குழாயை சேதப்படுத்திய பிரசாந்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் குழாய் சேதம்: ரூ.25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: