தேவாலய கொடியேற்றம்

 

சாயல்குடி, செப்.24: முதுகுளத்தூர் அருகே தாளியரேந்தலில் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. விழாவிற்கு பங்கு தந்தை குருஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். ராமநாதபுரம் புனிதஜெபமாலை ஆலய பங்கு தந்தை சிங்கராயர் கொடியேற்றினார். இதனையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பங்கு தந்தைகளின் சிறப்பு மறையுரை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. 29ம் தேதி ஆரோக்கிய அன்னை கெபி திறப்பு விழா, 30ம் தேதி தேர்ப்பவனி நடக்கிறது. கொடியேற்று விழாவில் தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post தேவாலய கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: