இது மேலும் அவர்களை மன சோர்வடைய செய்துள்ளது. அந்த கால காவல்துறையினர் போல் இப்போது இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் கவுரவத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு பணி நிறைவு பெற்ற போலீசாரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை பணி நிறைவு பெற்றவர்களுக்கு சங்கம் என்பதை விட, பணியில் உள்ளவர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என போராடியவர்கள் உண்டு. வெறும் சங்கம் என்று இல்லாமல், சமூக சேவையில் முழுமையாக ஈடுபட வேண்டும். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பயிற்சி மையங்களை தொடங்கி, காவல்துறையை சேர்ந்தவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி ஏழை மாணவ, மாணவிகள் அனைவர் வாழ்வும் உயர உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post பணிச்சுமை, மன அழுத்தத்தில் போலீசார் தமிழ்நாடு காவல்துறையின் கவுரவத்தை மீட்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு appeared first on Dinakaran.