இந்த நிலையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரும் 2ம் சீசனுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டன. அதேபோல் 12,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும் 500க்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான அலங்கார தாவரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த அலங்கார செடிகள் தயார் நிலையில் உள்ளதால், அவைகளை மாடங்களிலும் மற்றும் சிறிய புல் மைதானத்திலும் அலங்கரித்து வைப்பதற்காக நர்சரியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. மாடங்களில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் 500 தொட்டியில் அலங்கார தாவரங்கள்: 2வது சீசனுக்கு தயார் appeared first on Dinakaran.