நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 22 நாட்களில் 20 நாட்கள் மழை பெய்திருந்தும் அணைக்கு சராசரி வினாடிக்கு 510.04 கனஅடி நீர்வரத்து மட்டுமே இருந்துள்ளது. அதனால் பெரியாறு அணைக்கு வரும் நீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு மடை மாற்றப்படுவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 232.80 சதுர மைல்கள் பகுதியை, கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து இதில் உள்ள சதியை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
The post பெரியாறு அணைக்கு வரும் நீர் இடுக்கி அணைக்கு மடை மாற்றம்? விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.