கல்லூரி மாணவி மாயம்

தர்மபுரி, செப்.20:பாலக்கோடு அடுத்த பி.கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சத்யசுந்தரம். இவரது மகள் சீதாஸ்ரீ (19). அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி சென்று வருவதாக கூறிச்சென்ற சீதாஸ்ரீ, மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து சத்யசுந்தரம், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: