தற்போது 10 சதவீதம் உள்ள காடுகளில் காட்டு மாடுகள், மான்கள், வேட்டை நாய்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில் காட்டுப்பள்ளி காலாஞ்சி காட்டுப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீரை தேடி, தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறுகின்றன. அவைகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. தற்போது காட்டுப்பள்ளி காலாஞ்சி காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் சுற்றி திரிவதாக பழவேற்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனச்சரக அலுவலர் ரூபஸ் வெஸ்லி தலைமையில் வனவர் நரசிம்மன், வனக்காப்பாளர் கோட்டீஸ்வர ராவ், வேட்டை தடுப்பு காவலர்கள் குணசேகர், கார்மேகம், புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் காட்டுப்பகுதியில் நுழைந்து 2 மாத ஆண் புள்ளி மானை மீட்டு பழவேற்காடு வனசரக பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிண்டி மற்றும் ஆரம்பாக்கம் வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
The post காட்டுப்பள்ளியில் புள்ளி மான் மீட்பு appeared first on Dinakaran.