8 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 

விருதுநகர், செப்.13:விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சாத்தூரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் சாத்தூர் பெரியார் நகரில் கருப்பசாமி(46) வீட்டின் அருகில் தகர செட்டில் 38 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையில் 1,900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 38 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 8 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: