மாரகேச் அருகில் உள்ள மலை பகுதியில் பல கிராமங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாலைகளில் பாறைகள் விழுந்துள்ளதால் மீட்பு பணி மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.மொராக்கோவின் அருகில் உள்ள ஐரோப்பிய நாடானா ஸ்பெயின் மீட்பு பணிகளில் உதவி அளிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோஸ் மனுவேல் அல்பாரேஸ் கூறுகையில்,‘‘நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான மொராக்கோ வெளியுறவு அமைச்சர் உதவி கேட்டுள்ளார். ஸ்பெயினுக்கும் மொராக்கோவுக்கும் இருக்கும் நட்பின் அடிப்படையில்,இந்த உதவி அளிக்கப்படுகிறது’’ என்றார். அந்த நாட்டின் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் வரை 2,122 பேர் பலியாகி விட்டனர். மாரகேச் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாகாணங்களில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2,421 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில், 1,404 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியானதையடுத்து, அந்த நாட்டில் 3 நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post குலை நடுங்க வைக்கும் மொராக்கோ.. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 2,122 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.