அறந்தாங்கி அருகே சித்திரவிடங்கம் மகாலிங்கமூர்த்தி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

 

அறந்தாங்கி,செப்.11: ஆவுடையார்கோவில் அருகே சித்திரவிடங்கம் மகாலிங்கமூர்த்தி முனீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சித்திரவிடங்கம் கிராமத்தில் விநாயகர்,மகாலிங்கமூர்த்தி முனீஸ்வரர், பாலமுருகன், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில்கள் அமைந்துள்ளதுஇக்கோயில்கள் கும்பாபிஷேகம் செய்வது என அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதையடுத்து சிறப்பான யாகசாலை அமைத்து முதற்கால யாக பூஜை கடந்த 8ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றதுகடம் புறப்பாடானது மேளதாளங்களுடன் கோயிலை சுற்றி வலம் வந்த பின் கோபுர கலசத்தை அடைந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதில் சித்திரவிடங்கம் மற்றும் ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கோபுர தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அறந்தாங்கி அருகே சித்திரவிடங்கம் மகாலிங்கமூர்த்தி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: