மேலும், சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் ப.சுப்பராயன் பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் முதல்முறையாக அரசாங்க பணிகளில் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன் திருவுருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.