டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆர்.கே.பேட்டையை சேர்ந்த தலைமையாசிரியர் தேர்வு: ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் நடப்பாண்டில் 396 ஆசிரியர்களைத் தேர்வு செய்து விருது வழங்கப்பட உள்ளது. இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அ.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னைனையில் இன்று நடைபெறும் விழாவில் அவருக்கு நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆர்.கே.பேட்டையை சேர்ந்த தலைமையாசிரியர் தேர்வு: ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: