பேட்டையில் சிறப்பு வரிவசூல் முகாம்

நெல்லை,செப்.4: நெல்லை மாநகராட்சி 22வது வார்டு பேட்டையில் சிறப்பு வரிவசூல் முகாம் நடந்தது. முகாமை ஆய்வு செய்த மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். இதில் கவுன்சிலர் மாரியப்பன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி வருவாய் அலுவலர் சிவனையா, சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

The post பேட்டையில் சிறப்பு வரிவசூல் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: